21 ஜூலை, 2010

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரும் இன்று கொழும்பு வருகை


இந்திய நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர் களும் இன்று கொழும்பு வருவதாக மீன்பிடி மற்றும் நீர் வள அபிவி ருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 23ம் திகதி தெவிநுவரயில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ரோஹன புதா என்ற மீன்பிடி படகில் மீனவர்களும் கல்பிட்டியவில் இருந்து சென்ற ஹிரான் புதா என்ற படகில் 5 மீனவர்களும் கடந்த மார்ச் 3ம் திகதி திருகோணமலையில் இருந்து சென்ற சமிந்து புதா படகில் 5 மீன வர்களும் இருந்துள்ளனர். மேற்படி 12 மீனவர்களையும் இலங்கைக்கு அழைத்துவர அமைச்சு 5 இலட்ச ரூபா வரை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததன் காரணமாக விசாக பட்டணம் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 மீனவ படகு கள் இலங்கை மீனவ தொழில் நுட்பவியலாளர்கள் 20 பேரும் தற்போது இந்திய நீதிமன்றங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக