21 ஜூலை, 2010

இலங்கை நிலவரம் திருப்தி இல்லை: ரணில் விக்ரம சிங்கே

undefined
இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை திருப்தி அளிப்பதாக இல்லை என்று ரணில் விக்ரம சிங்கே தெரிவித்தார்.

இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே கொழும்பிலிருந்து விமானம் மூலம் செவ்வாய்கிழமை அதிகாலை சென்னை வந்தார்.

அப்போது செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:

இந்தியா, இலங்கை மீனவர்கள் பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்னைக்கு இந்திய அரசும், இலங்கை அரசும் மற்றும் இருநாட்டின் மீனவர் சங்க பிரதிநிதிகளும் சேர்ந்து பேச்சு நடத்தவேண்டும்.

இலங்கை அரசு தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறது. ஆனால் பணிகள் எதுவும் நடக்கவில்லை. நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த பிரச்னையை எழுப்ப இருக்கிறோம்.

ஐ.நா. குழு இலங்கை வந்தது சரியா என தெரியவில்லை. அதே நேரத்தில் அந்தக் குழுவை திருப்பி அனுப்பியது சரியல்ல என்றார் ரணில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக