21 ஜூலை, 2010

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்: உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக முன்னெடுக்க அரசு நடவடிக்கை


டெங்கு நுளம்பு ஒழிப்பு தொடர் பான வேலைத் திட்டங்களை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விரிவான அடிப்படையில் துரித மாக முன்னெடுப்பதற்கு அரசாங் கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் அடங்கிய வரைவின் பிரதிகளை சகல உள்ளூராட்சி ஆணையாளர்களுக்கும் நேற்று வழங்கினார்.

இந்த வரைவை ஒவ்வொரு உள் ளூராட்சி மன்றத்திலும் நிறை வேற்றி அதனடிப்படையில் டெங்கு நுளம்பு ஒழிப்புப் பணிகளைத் துரித மாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதாவுல்லா உள்ளூராட்சி மன்றத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய உள்ளூராட்சி வாரம் நேற்று ஆரம்பமானது. இதன் நிமித்தம் பத்தரமுல்லையிலுள்ள ஜனகலா கேந்திரவில் நேற்று ஆரம்பமான உள்ளூராட்சி மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பி ட்டார். இதேநேரம் இம்மாநாட் டின் இரண்டாவது நாளான இன்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன விசேட அதிதியாகக் கலந்து கொண்டு டெங்கு நுளம்பு ஒழிப்பு தொடர்பாக விசேட உரை யாற்றுவார்.

மாநாடு அமைச்சர் அதாவுல்லா தலைமையில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக