21 ஜூலை, 2010

ஐ.நா. ஆலோசனை குழுவின் உதவிக்கு மனித உரிமைகள் அதிகாரி தலைமையில் குழு

ஐக்கியundefined நாடுகள் செயலாளர் நாயகம் இலங்கை தொடர்பாக நியமித்த ஆலோசனைக்குழு நேற்றும் அதன் அமர்வுகளை நடத்தியுள்ளது. மூன்று உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவுக்கு உதவி செய்யும் உத்தியோகத்தர்கள் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுவலக அதிகாரி ரிச்சர்ட் பெனெற் தலைமை தாங்குகிறார் என்று ஐக்கிய நாடுகள் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குழுவுடன் இணைந்து பணியாற்றும் சிறு குழுவின் சீரான இயக்கத்தை உறுதி செய்வதற்கான ஆலோசனைக் குழு தொடர்ந்து 3 நாட்களுக்கு கூடவிருக்கிறது. ஆழ்ந்த அனுபவத்தை கொண்டுள்ள சிறு குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் முழு நேரம் கடமையாற்றுபவர்களாவர் என்று செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெஸிர்கி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக