21 ஜூலை, 2010

விமானம், கப்பலை வெளிநாடுகள் சோதிப்பதை எதிர்த்து ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா

தங்களது நாட்டு விமானங்கள், கப்பல்களை வெளிநாடுகள் சோதிப்பதை எதிர்த்து ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் புதிதாக பொருளாதாரத் தடை உத்தரவை பிறப்பித்தது. அதேபோல, தங்களது நாட்டுக்கு வரும் ஈரானுக்கு சொந்தமான விமானங்கள், கப்பல்களை உலக நாடுகள் சோதிக்க அனுமதி அளித்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவால் ஈரான் அதிருப்தி அடைந்துள்ளது. இதை தடுக்கும் விதத்தில் தற்போது தங்களது நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா ஈரான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டதை அந்நாட்டு அரசு வானொலி ஒலிபரப்பியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக