20 ஜூலை, 2010

மீண்டும் கவுரவ கொலை: தலித் வாலிபரை மணந்ததால் மகளை கொன்ற தாய்

மீண்டும் கவுரவ கொலை:    தலித் வாலிபரை மணந்ததால்    மகளை கொன்ற  தாய்

வட மாநிலங்களில் காதலித்து திருமணம் செய்பவர்களை குடும்ப கவுரவத்மீண்டும் கவுரவ கொலை: தலித் வாலிபரை மணந்ததால் மகளை கொன்ற தாய்துக்காக கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க கடுமையான சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனாலும் கவுரவ கொலைகள் தொடர்ந்து அதிகரித்தப்படி உள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் புலந்த்சார் என்ற இடத்தில் நேற்று ஒரு கவுரவ கொலை நடந்தது.

இந்த ஊரை சேர்ந்தவர் சங்கீதா நொய்டாவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடன் வேலை பார்த்து வந்தவர் ரவீந்தர்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். சங்கீதா உயர் ஜாதியை சேர்ந்தவர். ரவீந்தர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இதனால் அவர்கள் காதலுக்கு சங்கீதா பெற்றோர் எதிர்ப்பு தெரி வித்து வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் வீட்டை விட்டு ஓடி கடந்த 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இதை அறிந்த சங்கீதா பெற்றோர் சங்கீதாவை சந்தித்து உங்களுக்கு முறைப் படி பெரிய அளவில் விழா நடத்தி திருமணம் செய்து வைக்கிறோம். எங்களுடன் வந்து விடு எனக்கூறி சங்கீதாவை அழைத்து சென்றனர்.

வீட்டிற்கு சென்றதும் சங்கீதாவை அடித்து உதைத்தனர். அவருடைய தாயாரும் மற்றும் 3 உறவினர்களும் சேர்ந்து சங்கீதா கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தனர்.

சங்கீதா தற்கொலை செய்து கொண்டதாக நாடக மாடினார்கள். ஆனால் போலீசார் இது கொலை என்பதை கண்டுபிடித்து 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக