11 மார்ச், 2010

உயர் பாதுகாப்பு வலய வீடுகள் உரியவரிடம் கையளிக்கப்படும்: இராணுவத்


தளபதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட தெல்லிப்பளை மற்றும் திருநெல்வேலியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் மற்றும் வயல் நிலங்களை மீண்டும் அவற்றின் சொந்தக்காரர்களுக்கே கையளிக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

மக்களுடனான நல்லுறவுகளைத் தொடர்ந்து பேணும் நோக்கில் இராணுவ அலுவலகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்.

"தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மற்றும் தள வைத்தியசாலை ஆகியவை உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விரைவில் அகற்றப்படும்.

ஒற்றையாட்சியின் கீழ் ஜனாதிபதியின் தலைமைத்துவத்துடன் அனைவரும் சுதந்திரமாக சம உரிமையுடன் வாழும் வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது.

அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதிகாரத்தைத் தொடர்ந்து பேணுவதற்கும் அதன் மூலம் அரசியல் லாபம் சம்பாதிக்கும் இனப் பிரச்சினையை பயன்படுத்தும் சுயநலமிக்க யுகத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்"என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக