11 மார்ச், 2010

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அவயவங்களை இழந்த சுமார் 1000பேருக்கு




வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அவயவங்களை இழந்த சுமார் 1000பேருக்கு செயற்கைக் கால்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவிலிருந்து நேற்றுக்காலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள 19பேரைக் கொண்ட குழுவினர் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் இடைத்தங்கல் முகாமிற்கு சென்றுள்ளனர். யுத்தத்தால் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் நடவடிக்கையினை இன்றுமுதல் இந்தக் குழுவினர் ஆரம்பிப்பர் என்றும் இந்தக் குழுவினர் வவுனியாவில் ஒன்றரை மாதங்கள் வரையில் தங்கியிருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக