11 மார்ச், 2010

வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது அதனுடன் கட்சிப் பிரதிநிதிகளையும் செல்ல



வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது அதனுடன் கட்சிப் பிரதிநிதிகளையும் செல்ல அனுமதிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தேர்தல்கள் ஆணையாளரிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுக்கவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது வாக்குப்பெட்டிகள் களவாடப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாகவும் அதனால் அதனைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக