11 மார்ச், 2010

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச


நான்கு கிராமசேவையாளர் பிரிவுகளில் எதிர்வரும் 15ம் திகதியும் 16ம் திகதியும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என கிளிநொச்சி அரசஅதிபர் திருமதி றூ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இம்மீள்குடியேற்றம் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனால் தற்காலிகமாக வெளிமாவட்டத்தில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வசிக்கும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட புலோப்பளை மேற்கு, புலோப்பளை, முல்லையடி, பளை நகரம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளைச், சேர்ந்தவர்களே மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர். தற்காலிக பதிவு நீக்கத்துடன் வருபவர்கள் மட்டுமே மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனதெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக