11 மார்ச், 2010

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் இருவருக்கு பத்துவருட கால சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் இருவருக்கு பத்துவருட கால சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி, கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டார்கள் என்ற பெயரில் ஈராக்கியர்கள் இருவர் பண்டாரவளைப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். பண்டாரவளை நகரில் வைத்து குறித்த ஈராக்கியப் பிரஜைகள் இருவரும் கடந்தவாரம் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். அத்துடன் கைதுசெய்யப்பட்ட இருவரும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென்றும் இவ்வாறு செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் எட்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுமென்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக