11 மார்ச், 2010

பதுளையில் தொண்டமான் தங்கியிருந்த விடுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்



நேற்று இரவு பதுளையில் .தொ. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தங்கியிருந்த விடுதி மீது இனந்தெரியாதநபர்கள் சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை நேற்று மாலை பதுளை நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயம், அவர்களது வாகனத் தொடரணி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இவ்விரு சம்பவங்களையும் கண்டித்து கொட்டகலை, ஹட்டன், பொகவந்தலாவை உள்ளிட்ட பெருந்தோட்டப் பகுதிகளில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய நிருபர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக