25 மார்ச், 2010

பிரான்ஸ் தூதுவர் யாழ் குடாநாட்டிற்கு விஜயம், நிபுணர் குழு அமைப்பது தொடர்பில் ஐ.நாவின் அழைப்பை ஜப்பான் நிராகரித்தது-


பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் கிறிஸ்ரின் றொபிக்கோ இன்று யாழ். குடாநாட்டிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். அவர் இன்றுபிற்பகல் 3.30அளவில் யாழ். குடாநாட்டைச் சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர் யாழ். மாவட்ட அரசஅதிபர் கே.கணேஷ் மற்றும் அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதேவேளை இலங்கை தொடர்பாக ஆராய நிபுணர்கள் குழுவை அமைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் விடுவிக்கப்பட்ட அழைப்பினை ஜப்பான் நிராகரித்துள்ளது. ஜப்பான் நாட்டு உயரதிகாரி யசூசி அகாசிக்கு விடுக்கப்பட்ட அழைப்பையே அவர் நிராகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக