25 மார்ச், 2010

பொலிஸ் உத்தரவை மீறி ஓடிய ஆட்டோ மீது சூடு; ஒருவர் பலி; 2 காயம்







அம்பாறை மத்திய முகாம் வீரகொட பாலத்தடியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் நேற்று முன்தினம் (23) இரவு 08.45 மணியளவில் பாதையால் வந்த முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்திய போது அம்முச்சக்கர வண்டி நிறுத்தா மல் பிரயாணத்தை தொடர்ந்ததால் பொலிஸார் அதன் மீது துப்பாக் கிப் பிரயோகம் செய்ததில் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ள துடன் ஏனைய இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மரணித்தவர் மகேஸ் சம்பத் (23 வயதுடையவர்), வீர கொட ஊர்காவற்படை வீரராவார். மற்றையவர் துவான் சம்பத் குமார (24 வயதுடை யவர்) பொரளையில் கடமையாற் றும் இராணுவ வீரராவார். மூன்றாவது நபர் றொசான் (19 வயது) இவர் சீ. வி. எப் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக