25 மார்ச், 2010

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் சிரேஷ்ட ஆலோசகர் விஜய் நம்பியார் கலாநிதி பாலித கொஹன சந்திப்பு-

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி கலாநிதி பாலித கொஹனவுக்கும் ஐ.நா.சபையின் பொதுச்செயலர் பான்கீ மூனின் சிரேஸ்ட ஆலோசகர் விஜய் நம்பியாருக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழுவை அமைப்பது குறித்தே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா சபையின் பொதுச்செயலர் பான்கீ மூன் தெரிவித்துள்ளார். குறித்த நிபுணர்குழுவை அமைப்பது தொடர்பிலான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பான்கீ மூன் கூறியுள்ளார். இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி லியன் பெஸ்கோ விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை அரசுடன் இந்த நிபுணர்குழு தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த பான்கீ மூன், இந்த நிபுணர் குழுவிற்கு உறுப்பினர்கள் சிலர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக