21 மார்ச், 2010

வவுனியா அரச அதிபருக்கு பெரும் பாராட்டு




வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸினது அளப்பரிய சேவைக்கு பொது நிர்வாக உள்நாட் டலுவல்கள் அமைச்சின் செயலாளர் திஸா நாயக்க பாராட்டுத் தெரிவித்து ள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை நிர்வாக அபிவிருத்தி நிருவகத்தில் (ஸ்லீடா) கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசாங்க அதிபர்களுக்கான மாநாட் டில் வைத்தே அமைச்சின் செயலா ளர் வவுனியா அரசாங்க அதிபருக்கு இந்த பாராட்டினை தெரிவித்துள்ளார்.

மோதல் இடம்பெற்ற வேளை தமது இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்த சுமார் மூன்று இலட்சத்து க்கும் அதிகமான மக்களை சரியான முறையில் பராமரித்து அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணியை திருமதி சார்ள்ஸ் சரிவர செய்து வந்தார். பல சந்தர்ப்பங்களில் நானே அதனை நேரில் சென்று பார்த்துள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக