17 செப்டம்பர், 2010

கரடியனாறு சம்பவ இடத்துக்கு பிரதியமைச்சர் முரளிதரன் விஜயம்



கரயடினாறில் வெடிப்புச்சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு மீள்குயேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சென்று பார்வையிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரிகளிடமும் கலந்துரையாடியுள்ளார்.

இன்று காலை பதுளை- செங்கலடி வீதியில் கரடியனாறு சந்தியில் உள்ள பொலிஸ் நிலையத்திலேயே வெடிப்புச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்ற மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அமைச்சின் இணைப்பாளர் ரவீந்திரன் படை உயரதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் உடனடி விசாரணைக்கும் பணித்தார்.

சம்பவ இடத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக