17 செப்டம்பர், 2010

நிபுணர் குழு-பான் கீ மூன் சந்திப்பு




இலங்கையின் நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான்கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் முகமாக நியமிக் கப்பட்ட மூன்று போர் அடங்கிய குழுவினர் நேற்று பான் கீ மூனை சந்தித்துள்ளதாக ஊடக பேச்சாளர் மார்டின் நெசக்கி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐ.நா செயலாளரின் ஊடக பேச்சாளர் மார்டின் நெசக்கி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த குழு தமது உத்தியோக பூர்வ நடவடிக்கைகளை, பொது செயலாளர் பான் கீ மூனுடனான சந்திப்பின் பின்னர் ஆரம்பிக்கும் என மார்டின் நெசக்கி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக