17 செப்டம்பர், 2010

நல்லிணக்க ஆணைக்குழு நாளை கிளிநொச்சியில் கூடவுள்ளது



இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க ஆணைக்குழு நாளை கிளிநொச்சியில் கூடவுள்ளது.

இதில் போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களிடம் சாட்சியங்கள் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த இலங்கை தொடர்பான ஆலோசனைக் குழுவின் பணிகள் இந்த வாரத்தில் ஆரம்பமாகவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக