17 செப்டம்பர், 2010

மாணிக்க கற்களை கடத்த முற்பட்டவர் விமான நிலையத்தில் கைது



சட்ட விரோதமாக பத்து இலட்சம் பெறுமதியான மாணிக்க கற்களை கொண்டு செல்ல நபர் ஒருவர் கட்டுநாயக்க விமாநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து தாய்லாந்துக்கு மாணிக்க கற்களை கொண்டு செல்ல முற்பட்ட வேளை அவர் கட்டுநாயக்க பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக எமது விமாநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

மாணிக்க கற்களை கடத்திய நபர் பேருவளையைச் சேர்ந்த வர்த்தகர் என எமது விமாநிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக