17 செப்டம்பர், 2010

ஜனாதிபதி-பான்கீ மூன் 24 ஆம் திகதி சந்திப்பு



ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூனுக்கும் இடையிலான சந்திப்பு இம்மாதம் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இலங்கையின் நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான்கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் முகமாக நியமிக் கப்பட்ட மூன்று போர் அடங்கிய குழுவினர் நேற்று பான் கீ மூனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த குழு தமது உத்தியோக பூர்வ நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சில இலங்கையின் நிலவரம் குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தியிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக