17 செப்டம்பர், 2010

பாராளுமன்ற சபைக்கு சுமந்திரனின் பெயர் எதிர்க்கட்சி தலைவரால் சிபார்சு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பு

அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சபைக்கு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட நியமனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள் ளது. அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.

அதனால் அத்திருத்தத்தின் கீழ் உருவாக்கப் படும் பாராளுமன்ற சபையில் அங்கம் வகிப்பதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்திருப் பதாக அக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. எம். சுமந்திரன் நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமது அனுமதியைப் பெறாமல் இச்சபைக்குத் தமது பெயரைப் பிரேரித்துள்ளார். இதனை ஊடகங்கள் மூலம் தான் நான் அறிந்துகொண்டேன். என்றாலும் இந்நியமனத்தை நாம் ஏற்கமாட்டோம் என்றார். அரசியலமைப் புக்கான 18வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சபையில் சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் அடங்கலாக ஐவர் அங்கம் வகிப்பர்.

இதில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகிய மூவரும் பதவிநிலை உறுப்பினர்கள். ஏனைய இருவரும் பிரதமரினாலும், எதிர்க் கட்சித் தலைவராலும் நியமிக்கப்படும் உறுப்பினர்களாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக