16 ஜூலை, 2010

சிறுபான்மையினர் பிரச்சினை தீராமல் அரசியலமைப்புத் திருத்தமா?






சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அரசியலமைப்புத் திருத்தம் பற்றியும் நிறைவேற்று அதிகாரமுடைய பிரதமர் முறையை ஸ்தாபிப்பது பற்றியும் பேசிப் பயனில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

அரசியலமைப்புச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகண சபை உறுப்பினர் நா. குமரகுருபரன் இதனைத் தொவித்தார் தகவல் வெளியாகி உள்ளது .

"அரசியலமைப்புச் சீர்திருத்தம் குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் பேசவேண்டியது அவசியமாகும். ஆனால் அவ்வாறு நடைபெறுவதாகத் தெரியவில்லை.

யுத்தம் முடிவடைந்ததும் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார். எனினும் அதற்கு எந்தளவு முன்னுரிமை வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த விடயம்.

நாட்டில் 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை. இருப்பினும் 17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எந்த வகையில் சாத்தியமாகும் எனத் தெரியவில்லை.

இன்னல்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு முதலில் சரியான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதையே ஜனநாயக மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது" என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக