16 ஜூலை, 2010

பங்களாதேஷ் யுத்தக் கப்பல் கொழும்பு வருகை:அத்துல செனரத் தகவல்

பங்களாதேஷ் யுத்தக் கப்பலான 'பி.என்.எஸ்.அனுசந்தன்' நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாகக் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் தெரிவித்தார்.

இந்த யுத்தக் கப்பலானது ஜூலை மாதம் 18 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும். இக்காலப்பகுதியில் இலங்கை கடற்படை ஒழுங்கமைக்கும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் கப்பலில் வந்தோர் கலந்து கொள்வர்.

இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளைப் பேணும் பொருட்டே இந்நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிலிருந்து வந்த யுத்தக் கப்பலில் வந்த படையினர் திருகோணமலையில் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக