16 ஜூலை, 2010

வைகோ கைதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், சென்னையில் ம.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தடையை மீறி, இலங்கைத் துணை தூதரகத்தை அகற்றப் போவதாக புறப்பட்ட வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்தனர்.

கைதான அனைவரையும் சென்னை 18ஆவது பெருநகர மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் வைத்தனர். வைகோ தற்போது கடலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ உட்பட தலைவர்கள் கைதானதை கண்டித்து மதுரை நீதிமன்றம் முன், வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வக்கீல்கள் தமிழ்ச் சங்கத் தலைவர் சின்ராஜா தலைமை வகித்தார். ம.தி.மு.க., பொருளாளர் ஆசைதம்பி, சட்ட துறை செயலாளர் சந்திரன், வக்கீல்கள் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மனோகரன், சிவக்குமார், சங்கரநாராயணன் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வேலுநாச்சியார் பேரவை சார்பில் வக்கீல் பாண்டியன் தலைமையில் தனியான ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றதாக இந்தியஎ செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக