16 ஜூலை, 2010

தர்ஷிகா கொலை தொடர்பான சந்தேக நபர் பிணையில் விடுதலை

வேலணை வைத்தியாசாலையின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்ஷிகாவின் கொலை தொடர்பான சந்தேக நபர் டாக்கடர் பிரியந்த செனவிரட்ணவை பிணையில் செல்வதற்கு மேல்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

ஒரு லட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் சந்தேக நபரான டாக்டரை பிணையில் விடுவிப்பதற்கான அனுமதியை இன்று மேல்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது .

இந்நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறும் விசாரணைகளின் போது இவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக