16 ஜூலை, 2010

2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 900 குண்டுகள் ஜப்பானில் கண்டெடுப்பு






உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட 900-த்துக்கும் அதிகமான வெடிக்காத குண்டுகள் ஜப்பானில் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

÷2-ம் உலகப் போரின்போது ஜப்பான் மீது அமெரிக்க படைகளால் குண்டுமழை பொழியப்பட்டது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த நகரங்கள் கூண்டோடு அழிந்தன.

÷இந்த நிலையில் ஜப்பானின் ஒக்கினாவா நகரில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வந்தன. அப்போது சாலையோரம் இருந்த ஒரு ஹோட்டல் இடிக்கப்பட்டது. ஹோட்டல் இருந்த பகுதிக்கு கீழே பள்ளம் தோண்டியபோது வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸக்ஷ்ர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அங்கு நிதானமாக பள்ளம் தோண்டி குண்டுகள் மெதுவாக எடுக்கப்பட்டன. வெடிக்காத நிலையில் மொத்தம் 902 குண்டுகள் அகற்றப்பட்டன.

÷இதுகுறித்து இடோமான் நகர மூத்த போலீஸ் அதிகாரி கியோகடா மேடோமரி கூறியதாவது:

÷2-ம் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்தினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான குண்டுகளை வெடிக்காத நிலையில் அவர் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். ஜப்பானை விட்டு அமெரிக்க ராணுவம் சென்றபோது சுமார் 10 ஆயிரம் டன் வெடிக்காத குண்டுகளை அவர்கள் விட்டுச் சென்றதாகத் தெரியவந்தது.

÷இதுவரை ஏராளமான டன் எடையுள்ள வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே வெடிகுண்டுகள் கிடைத்து வருவதால் ஜப்பானைச் சேர்ந்த தொழிலாளர்கள் பள்ளம் தோண்டும்போதும், கட்டடப் பணிகளில் ஈடுபடும்போதும் மெட்டல் டிடெக்டரை கையில் வைத்திருப்பர்.

÷அவ்வாறு சோதனை செய்தபோது இந்த ஹோட்டலுக்குக் கீழே வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. மொத்தம் 902 குண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டெடுத்தோம். இந்த வகை குண்டுகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என்று தெரிகிறது என்றார் அவர்.

÷இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கப் படைகளுடன், ஜப்பான் படைகள் நடத்திய போரில் அதிகம் பாதிக்கப்பட்டது ஒகினாவா நகரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 83 நாட்கள் நடந்த போரில் சுமார் 1.90 லட்சம் ஜப்பானியர்கள் இறந்தனர். இதில் பாதிப்பேர் ராணுவத்தினர். மற்றவர்கள் பொதுமக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக