6 ஜூலை, 2010

இலங்கையருக்கான விசா தடையை நீக்க வேண்டும்:சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் சட்டவிரோத அகதிகளுக்காக விசேடமாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட வேண்டும் என நியூயோர்க்கைத் தளமாக கொண்ட சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய இயக்குனர் இலேன் பேர்சன் இன்று இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.இலங்கை ஆப்கானிஸ்தான் அரசாங்க நடவடிக்கைகள் குறித்து எதிரான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக அந்த நாடுகள் தற்போதும் எதிர்நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களுக்கு துன்பத்தை விளைவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக விசேடமாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட வீசா தடைக்காலப்பகுதி எதிர்வரும் 8ம் திகதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கான புதிய பிரதமராக ஜுலியா கில்லார்ட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குறிய நடவடிக்கைகளை அவர் எடுப்பார் என தாம் எதிர்பார்ப்பதாக இலேன் பேர்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை ஆப்கானிஸ்தான் அகதிககளுக்கு எதிரான தடையை நீக்குவதன் மூலம் மனித உரிமைகளை பேணும் சிறந்த நாடு அவுஸ்திரேலியா என்பதை அவர் வெளிப்படுத்துவார் என நம்புவதாகவும் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக