6 ஜூலை, 2010

சீனாவில் 6-வது வாழும் புத்தராக திபெத் சிறுவன் தேர்வு






சீனாவில் புத்தமதத்தை சேர்ந்தவர்கள் ஒரு சிறுவனை தேர்ந்தெடுத்து அவனை புத்தரின் மறு அவதாரமாக நினைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவன் 5-வது வாழும் புத்தராக மதித்து வணங்கப்பட்டு வந்தான்.

தற்போது அவனுக்கு 20 வயதாகிறது. எனவே, புதிதாக ஒரு சிறுவனை வாழும் புத்தராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக பல ஆண்டுகளாக தெய்வீக அம்சம் பொருந்திய சிறுவனை சீன அரசும், புத்த மத மூத்த குருக்களும் தேடிவந்தனர்.

இந்த நிலையில், தற்போது 6-வது வாழும் புத்தராக 4வயது சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறான். அவனது பெயர் லோசாங் தோஜ். சீனாவின் ஆளுமைக்குட்பட்ட திபெத்தை சேர்ந்தவன்.

அங்குள்ள ஷானன் மாகாணத்தில் லகன்ஷ் கவுண்டி என்ற இடத்தில் கேசாங் வாங்கு- பேமா லகாஸ் தம்பதியின் மகன். கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி பிறந்தான்.

நேற்று இவன் திபெத் தலைநகர் லாசாவில் ஜோக்காங் என்ற இடத்தில் உள்ள புத்தர் கோவிலில் வைத்து முறைப்படி தேர்வு செய்யப்பட்டான். தலாய்லாமாவுக்கு பிறகு சீன அரசால் நியமிக்கப்பட்டுள்ள இவனை 11-வது பஞ்சன் லாமாவும் சீன அரசின் அதிகாரிகளும் தேர்ந்தெடுத்தனர்.

முன்னதாக வாழும் புத்தருக்கான தேர்வு போட்டியில் லோசாங் தோஜூம் மற்றொரு சிறுவனும் இருந்தனர். இவர்கள் இருவரது பெயரும் பட்டு துணியால் மூடப்பட்ட ஒரு பெரிய தாழியில் போடப்பட்டு மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக