6 ஜூலை, 2010

தூக்கிட்ட நிலையில் பெண்ணின் சடலம் வாழைச்சேனையில் மீட்பு



வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில், தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

36 வயது மதிக்கத்தக்க இச்சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வாழைச்சேனை மாவட்ட நீதிபதி ரி. சுவர்ணராஜா சடலத்தைப் பார்வையிட்டு மரணத்தில் சந்தேகமிருப்பதால் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவட்டுள்ளார்.

பொலிசார் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக