6 ஜூலை, 2010

ஜனாதிபதியுடனான ஒப்பந்தத்தின் பிரகாரமே ஐ.நா. நிபுணர் குழு நியமனம்-ஜெனரல் சரத்பொன்சேகா

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனுக்கும், ஜனாதிபதிக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே மூவர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இராணுவ முன்னெடுப்புக்கள் சர்வதேச சட்ட த்தின் பிரகாரமே முன்னெடுக்கப்பட்டன.

இதில் தவறு இழைக்கப்படவில்லை என்று ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார். அரசாங்கம் தவறிழைக்காவிடின் ஐ.நா. நிபுணர் குழுவுக்கு ஏன் பயப்பட வேண்டும். அதில் இருந்து ஏன் ஒளிந்திருக்க வேண்டும்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக கடைப்பிடிக்கப்பட்டால் மருமகன் சரணடைவார். மக்களுக்கு பின் சென்று கொண்டிருந்த சி.ஐ.டி. யினர் தற்போது ராஜபக்ஷ குடும்பத்தினரை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இராணுவ முன்னெடுப்புக்கள் சர்வதேச சட்டத்தின் பிரகாரமே முன்னெடுக்கப்பட்டன. இதில் தவறு இழைக்கப்படவில்லை. அதற்கு நான் பொறுப்பு கூறுவேன். ஜனாதிபதி 2009 ஆம் ஆண்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே ஐ.நா. வின் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. தவறுகளை இழைத்திருக்காவிடின் ஒளிந்திருக்க ஏன் நீங்கள் முயலுகின்றீர்கள்.

நாட்டில் 30 வீதமானவரே 2000 டொலரை வருமானமாக பெறுகின்றனர். சம்பளத்தை பொறுத்தமட்டில் இராணுவ அதிகாரிகளே கூடுதல் சம்பளம் பெறுகின்றனர். சரியாக வேலை செய்தாலும் மரண அச்சுறுத்தல் அல்லது இடமாற்றம் வழங்கப்படுகின்றது. மக்கள் அரசாங்கத்தின் பால் அச்சம் கொண்டுள்ளனர். சட்டத்தரணிகள் எழுந்து நிற்கின்றனர். சட்டத்தை பாதுகாக்கின்றனர். யுத்தத்திற்கு பின்னர் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. இனங் காணவும் இல்லை.இராணுவ வீரர்கள் தமக்கு சுமையாக இருக்கின்றனர் என அரசாங்கம் கருதுகின்றது. தற்போது இராணுவத்தினர் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்தத்திற்கு பின்னர் அவர்களின் நலன்கள் பேணப்படுவதில்லை. அரசியல் தலையீட்டினால் பொலிஸ் சேவை இன்று சீர்குலைந்துள்ளது. அரசாங்கத்திற்கு சார்பானவர்களே வடக்கு கிழக்கில் சேவைக்கு அமர்த்தப்படுகின்றனர். அங்கு சேவையில் இருப்பவர்கள் இரண்டாம் தரமாகவே கணிக்கப்படுகின்றனர்.

தாய் நாட்டிற்கு பங்கம் ஏற்படாத வகையில் செய்ய வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் தயாரில்லை. முன்னர் பெற்றுக் கொண்ட ஆயுதங்களுக்கான கடனையே அரசாங்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றது. நாட்டில் சட்டம் பாதுகாக்க வேண்டும் சட்டம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கீழே இருக்கின்றது. அவர் முட்டாள்தனமான செயலையும் செய்வார். நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முறையாக பின்பற்றப்படுமானால் எனது மருமகன் பொலிஸில் சரணடைவார். அவர் வயதுக்கு வந்தவர். அவரை சரணடையுமாறு நான் கூற வேண்டியதில்லை.அரசியல்வாதிகள் சட்டத்திற்குள் தலையீடுகளை செய்யக் கூடாது. பஞ்சாயுதகாரனும் பந்தம் பிடிப்பவர்களும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆடுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தேர்தல் விளம்பரத்திற்காக என்னிடம் ஆறு இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் கண்ணீர் மல்க அதனை பெற்றுச் சென்றார். மிரானில் 9 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அங்கு அனுப்பியது யார்? என்பதை கண்டறிய வேண்டும். உள்நாட்டு முரண்பாடு சர்வதேச ரீதியில் பேசப்படுகின்றது.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 60 வயது வரை நான் சேவையில் இருந்திருக்கலாம். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னரே நான் ஓய்வு பெற்றேன். வெளிநாட்டுக்கு செல்லும் இராணுவ வீரனுக்கு 200 டொலர்களே வழங்கப்படும். எனினும் ஜனாதிபதியின் மகனுக்கு 5000 டொலர்கள் வழங்கப்பட்டது எவ்வாறு? அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் மக்களை கைது செய்யும் நடவடிக்கையிலேயே சி.ஐ.டி. யினர் ஈடுபட்டனர். எனினும் இன்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பின்னாலும் சபாநாயகர் பின்னாலும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பின்னாலும் அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். பந்தம் பிடிப்பதற்கு அன்று ஒருவரே இருந்தார் இன்று அப்பணியை பலரும் செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக