6 ஜூலை, 2010

இன்றைய ஐநா கூட்டத்தொடரில் எலிசபெத் மகாராணியார் உரை

பிரித்தானியவின் எலிசபெத் மகாராணியார் இன்று மாலை, நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார். 50 வருடங்களின் பின்னர் ஐநா கூட்டத் தொடரில் இவர் உரையாற்றும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

1957 ஆம் வருடம் இடம்பெற்ற ஐ.நா. கூட்டத்தொடரில் இவர் முதன்முறையாக உரையாற்றினார்.

இன்றைய கூட்டத் தொடரில் ஐ.நாவின் 16 தலைமை உறுப்பினர்கள் முன்னிலையில் இவர் உரையாற்றுகின்றார்.

எலிசபெத் மகாராணியார், இராச்சியம், பேர்பூடா, எந்திகுவா, அவுஸ்திரேலியா, பஹமஸ், பார்படொஸ், பிரேசில், கனடா, ஜமெய்க்கா, நியூசிலாந்து, பப்புவாநியூகினியா, செய்ன்ட்கிட்ஸ், நேவிஸ் சென்லுசியா, சென் வின்செண்ட், ஜெனடின்ஸ், சொலமன் தீவு மற்றும் துவாலு ஆகிய பிராந்தியங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக