6 ஜூலை, 2010

இங்கிலாந்து, ஜெர்மனியில் ஈரான் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்ப மறுப்பு

இங்கிலாந்து, ஜெர்மனியில்    ஈரான் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்ப மறுப்பு
இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் ஈரான் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்ப மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
தனது அணுசக்தி கொள்கையில் ஈரான் பலமாக உள்ளது.

அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, ஈரான் மீது ஒருதலைபட்சமான சட்டத்தை இயற்றியுள்ளது. அதாவது ஈரானுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிடம் இருந்து ஈரான் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் அரசு விமானங்களும், தனியார் விமானங்களும் சென்று வருகின்றன.

இதனால் அங்கு வாழும் ஈரானியர்கள் தங்கள் நாட்டுக்கு சென்றுவர வசதியாக இருந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையாதலால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் ஈரானுக்கு வருகின்றனர். எனவே பெருமளவில் ஈரான் பயணிகள் விமானங்கள் விடப்பட்டுள்ளன.

ஆனால் அந்த விமானங்களுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் பெட்ரோல் நிரப்ப மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைக்கு பிறகுதான் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு ஈரான் விமான பயணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு ஈரானுடன் வர்த்தக ரீதியான தொடர்பு வைத் துள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் பொருளாதார குற்றம் இழைத்து விட்டது.

அதன் விளைவை அந்நாடு விரைவில் சந்திக்கும் என ஈரானை சேர்ந்த எம்.பி. பெர்வேஷ் சோரோரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக