6 ஜூலை, 2010

ஜனாதிபதி சட்டத்தரணி டெஸ்மன்ட் பெர்னாண்டோ காலமானார்

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி டெஸ்மன்ட் பெர்னாண்டோ இன்று மாலை காலமானார்.

சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான டெஸ்மன்ட் 1974 ஆம் ஆண்டில் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது செயலாளராக தெரிவானதோடு இச் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில் சர்வதேச சட்டத்தணிகள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக