6 ஜூலை, 2010

நாடுகடந்த அரசை ஒழிக்க அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்:ரணில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையை நாம் வரவேற்கின்றோம். அந்த பேச்சுவார்த்தை இந்தியாவிற்குச் செல்வதற்கு முன்னதான பேச்சாக மட்டும் அமைந்து விடக் கூடாது. நாடு கடந்த அரசாங்கத்தை இல்லாதொழிக்க அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பேச்சில் அடிப்படை இணக்கப்பாடு எட்டப்படுமாயின் நாமும் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உதவுவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்பதுடன், இந்த பிரச்சினையை பாராளுமன்றத்திற்குள் ளேயே தீர்த்துக் கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதியின் கீழ் 62 வீதமான செலவிற்கான அமைச்சுக்களும் நிதி நிறுவனங்களும் இருக்கின்றன. அப்படியாயின் இங்கிருக்கின்ற அமைச்சர்கள் தகுதியானவர்கள் இல்லையா? அல்லது அவர்களுக்கு தகுதி இல்லையா?

நிதியமைச்சில் நிதி, நிதிச் சலுகை மற்றும் திட்டம் தேவை இவையெல்லாம் இருக்கின்றதா? ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஆலோசர்களும் காரியாலயங்களும் ஏராளம். அமைச்சர்களுக்கு அமைச்சுகளுக்கு பொறுப்பு கூற முடியாதா? ஆலோசகர்களை இரவில் முக்கிய ஹோட்டல்களில் கண்டுகொள்ளலாம். 50 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாத்துறையினரை கொண்டு வருவதாக அறிவித்தனர். எனினும் அதற்கென ஓர் அமைச்சு இல்லை.

??? நாடுகளின் தகுதியானவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இங்கு தகுதியான சுற்றுலாத்துறை அமைச்சுக்கு தகுதியானவர் இல்லையா? அப்படியாயின் சரத் அமுனுகமவை சுற்றுலாத்துறை அமைச்சராக நியமியுங்கள்.

பி.பி. ஜயசுந்தர 4 அமைச்சுக்களுக்கு செயலாளராக இருக்கின்றார். ஒன்பது அமைச்சுகளும் 63 வீதமான நிதியை கையாளும் நிறுவனங்களும் ஜனாதிபதியின் கீழ் இருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அமைச்சரவை இல்லை அமைச்சரவையின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. நகரங்களை கட்டியெழுப்புவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தேவையா? அப்படியாயின் அமைச்சர்கள் திருடர்கள் என நினைக்கின்றார்களோ என்பதை நீங்களே கண்டறியவேண்டும். பொது நலவாய பாராளுமன்ற சங்கத்தின் கூட்டத்திற்கு இருவரின் பெயரை நாம் குறிப்பிட்டோம். சரத் பொன்சேகாவை அங்கு அனுப்புவதற்கு சபாநாயகரும் அனுமதி வழங்கினார்.

பாராளுமன்றத்தின் அனுமதி மட்டுமன்றி நீதிமன்றத்தின் அனுமதியும் தேவை என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் இங்கு நடைபெற்ற குழுக்கூட்டத்தில் அவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. "ஹராரே' பிரகடனத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும். கஞ்சா தொடர்பில் பிரகடனத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 2005 முதல் 2008 வரையிலும் கணக்காய்வாளர் அதிபதியின் கணக்காய்வு அறிக்கை இன்று வரையிலும் முன் வைக்கப்படவில்லை. ஆராய்வுக் குழுவொன்று பாராளுமன்றத்தில் இல்லை.

அரசியலமைப்பு மக்களுக்கு உரியதாக இருக்க வேண்டும். அது குடும்ப அரசியலமைப்பாக இருக்கக் கூடாது என்பதுடன் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர் தினேஸ்குணவர்தனவின் குழுக்களின் அறிக்கையில் 90 வீதத்தை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக