6 ஜூலை, 2010

வடக்கு, கிழக்கில் வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்தினால் நிதி

வடக்கு, கிழக்கில் உள்ள வணக்கத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்க நிதிக்கு புறம்பாக வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் தி.மு. ஜயரட்ன கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள வணக்கத் தலங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளின் ஆரம்ப கட்டம் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

பாராளுமன்ற தொகுதியில் நேற்று (05) நடைபெற்ற இஸ்லாமிய மத அலுவல்கள் தொடர்பான செயற்குழு கூட்டத்தில் பங்குபற்றியபோதே பிரதமர் தி.மு. ஜயரட்ன இவ்வாறு கூறினார்.

புத்த சாசன மற்றும் மத அலுவல்களுக் கான அமைச்சர் என்ற வகையில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து வணக்கத் தலங் களையும் சீராக பராமரிக்கும் வேலைத் திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை அறி முகப்படுத்த தான் தீர்மானித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல்களில் நிலவும் பிரச்சினைகளுடன் இஸ்லாமிய பள்ளவாசல்களில் ஒலிபெருக் கிகளின் பாவனை தொடர்பாக நிலையான சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மோதல் களின் போது தமது கணவர்மாரை இழந்த முஸ்லிம் விதாவைகளுக்காக பாது காப்பு திட்டமொன்றை ஏற்படுத்தப் போவதாக பிரதமர் செயற்குழுவின் அதி காரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இவ்வாறான திட்டத்தின் மூலம் அப்பிரதேசத்தில் நிலவும் சமூக பிரச்சினைகள் பலவற்றை குறைக்க முடியமென்றும் பிரதமர் மேலும் கூறினார்.

இஸ்லாமிய மத அலுவல்கள் தொடர்பாக செயற்குழு கூட்டத்துக்கு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, புத்த சாசன மற்றும் மத அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் எம்.கே. டி.எஸ். குணவர்தன, சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் தொடர்பான பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா, பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக