6 ஜூலை, 2010

ஐநா அலுவலகம் முன்னாலிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கலைப்பு

ஐ.நா அலுவலகம் முன்பாக, இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோரைப் பொலிசார் பலவந்தமாகக் கலைத்து வருவதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐநா அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரைப் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

அதேவேளை, ஐநா அலுவலகத்திலிருந்து பொலிஸாரின் பாதுகாப்புடன் உத்தியோகத்தர்கள் வெளியேறிச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக