6 ஜூலை, 2010

ஜப்பானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் : மக்கள் அச்சம்

வடக்கு ஜப்பானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின என்றும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் கலவரமடைந்து, பின்னர் பூமியதிர்வு என அறிந்ததும் பீதி அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறி அவர்கள் தெருக்களில் ஓடினர். சிறிது நேரத்துக்கு பிறகு பயத்துடன் வீடு திரும்பினர்.

இந்த நிலநடுக்கம் தலைநகர் டோக்கியோவில் இருந்து 500 கி.மீட்டர் தூரத்தில் 24 கி.மீட்டர் பூமிக்கு அடியில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேத விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

உலகில் பூகம்பம் ஏற்படும் பகுதிகளில் ஜப்பானும் ஒன்று. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும், சுனாமி எச்சரிக்கை விடுவதும் வாடிக்கையானவை.

எனவே நிலநடுக்கத்தின் போது நடந்து கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக