26 ஏப்ரல், 2010

ஐ.தே.க - ஜ.ம.மு சந்திப்பு நாளையும் தொடரும்



ஐக்கிய தேசியக் கட்சிக்கும் , ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு நாளையும் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவும், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும், கட்சியின் ஏனைய இரு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது, ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பிளவு ஏற்படக் கூடாது என ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியதாகத் தெரிவித்த பிரபா கணேசன், நாளை இடம்பெறவுள்ள சந்திப்பில் மனோ கணேசனும் கலந்துகொள்ள வேண்டும் என ,தே.. எதிர்பார்ப்பதாகத் அவர் தெரிவித்தார்.

நாளை இச்சந்திப்பு .தே.. தலைமையகமான சிறிகொத்தவில் பிற்பகல் 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக பிரபா கணேசன் எமது இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக