26 ஏப்ரல், 2010

ஐ.ம.சு.முவின் கூட்டு மேதினம் கொழும்பில்; ஜனாதிபதி தலைமை


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு மே தின வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நடைபெறும் என்று முன்னணியின் மேதின வைபவ ஏற்பாட்டுக் குழுச் செயலாளரும், மேல் மாகாண ஆளுனருமான எஸ். அலவி மெளலானா நேற்றுத் தெரிவித்தார்.

“மக்களின் அபிவிருத்தியில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு” என்ற தொனிப்பொருளில் முன்னணியின் கூட்டு மே தின வைபவம் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

“இம்முறை மே தின ஊர்வலம் நடத்துவதில்லை என நாம் தீர்மானித்துள்ளோம். என்றாலும் கூட்டு மே தின வைபவம் பிற்பகல் 2.00 மணிக்கு மாநகர சபை மைதானத்தில் ஆரம்பமாகும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக