26 ஏப்ரல், 2010

அமிதாப் பச்சானின் வீட்டின் முன் 'நாம் தமிழர்' இயக்கத்தினர் போராட்டம்

'நாம் தமிழர்' பேரியக்கத்தின் மராட்டிய மாநில கிளையின் சார்பில் பெருந்திரளான தமிழர்கள் ஒன்று சேர்ந்து மும்பையில் இன்று நடிகர் அமிதாப் பச்சானின் வீட்டின் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தி திரைப்பட துறை அவர்களின் மிக பெரிய விருது வழங்கும் விழாவை கொழும்பில் நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்நிகழ்வின் தூதர் இந்தி திரையுலகின் முன்னணி நாயகன் அமிதாப் பச்சன் ஆவார்.

அவர் வீட்டின் முன் 'நாம் தமிழர்' பேரியக்கத்தின் மராட்டிய மாநில கிளையின் சார்பில் பெருந்திரளான தமிழர்கள் நேற்று ஒன்று சேர்ந்து பெரும் போராட்டம் நடத்தியவை மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய திரைப்பட விருது விழாவை நடத்தும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கே விரைந்து வந்தனர். அனைத்து முன்னணி இந்திய ஊடகங்களும் ஆர்ப்பாட்ட நிகழ்வை பதிவு செய்தன.

இந்திய திரைப்பட விருது விழாவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமிதாப் ஆகியோர்' நாம் தமிழர்' இயக்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர். ஈழத்தமிழர்களின் நிலையும், இலங்கையின் போர் குற்றங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்திய திரைப்பட விருது விழா அனைத்து நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்னை தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக