26 ஏப்ரல், 2010

பிரதமர் திமு கண்டியில் சமய வழிபாடு

பிரதமர் தி.மு.ஜயரத்ன இன்று திங்கட்கிழமை கண்டிக்கு விஜயம் செய்து பல்வேறு சமய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், கண்டி மீராமக்காம் பள்ளி, கிருஸ்தவ தேவாலயம் தலதா மாளிகை,மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடம் என்பவற்றிற்கும் சென்று நல்லாசி பெற்றார். கண்டி செல்வ விநாயகர் ஆலயத்தில் விஷேட பூஜை நடந்துடன் அவர் அங்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மீராமக்கம் பள்ளியிலும் துவா பிராத்தனை இடம் பெற்றதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அவருக்கு அங்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

பிரதமருடன் அவரது துனைவியார் மகன்,மகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களான அமைச்சர் பர்டி பிரேமலால் திசாநாயக்க,அமைச்சர் துமிந்த திசாநாயக்க மத்திய மகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக