26 ஏப்ரல், 2010

ஏறாவூரில் மே தின கொண்டாட்ட நிகழ்வு


மட்டக்களப்பு-ஏறாவூரில் இம்முறை மேதினம் கோலா கலமாகக் கொண்டாடப்படவுள்ளது. மீனவர்கள், வியாபாரிகள் சங்கம், மீனவர் கூட்டுவுச் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப் புக்களை இணைத்து ஆட்டோ சாரதிகள் சங்கம் இம்முறை மே தின கொண்டாட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்தார்.

மரதன் ஓட்டம், ஆற்றில் தோணி யோட்டம், நீச்சல் போட்டி ஆகிய நிகழ்ச்சிகள் முதலாந் திகதி காலை இடம்பெறவுள்ளன. அன்று பிற் பகல் 1.30 மணிக்கு ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

ஏறாவூர் பெற்றோல் நிலையச் சந்தியிலிருந்து ஆரம்பமாகும் தொழி லாளர் ஊர்வலம் பிரதான வீதி வழியாக மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியைக் கடந்து புன்னக்குடா வீதி யூடாக அலிகார் தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சங்கம மாகும். அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தை பிராந்திய பொலிஸ் மா அதிபர் தேசியக் கொடியை ஏற்றி ஆரம்பம் செய்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக