26 ஏப்ரல், 2010

அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் ஐந்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானம்


அமைச்சர்களின் எண்ணிக்கையினை மேலும் ஐந்தினால் அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 37அமைச்சர்களுக்கான அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலதிகமாக ஐந்து அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாமென செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி கண்டி மாவட்டத்திற்கு 03அமைச்சுப் பதவிகளும், ஏனைய மாவட்டங்களுக்கு 02அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதவிகள் விரைவில் வழங்கப்படக் கூடுமென்றும் அரச தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக