26 ஏப்ரல், 2010

கடத்தல்கள் இடம்பெற்றால் அறியத்தரவும்: யாழ். கட்டளைத் தளபதி

யாழ் மாவட்டத்தில் கடத்தல் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடத்தல் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. எனினும் கடத்தல் சம்பவங்ள் இடம்பெற்றால் அவ் விடயம் தொடர்பில் எமக்கு அறியத்தரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடம் பெறும் கடத்தல் சம்பங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ். குடா நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் 4 கடத்தல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ். குடா நாட்டின் சங்கானை, மூளாய், அராலி, ஓட்டுமடம் ஆகிய பகுதிகளிலே இந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக