14 மார்ச், 2010

பிடிவிறாந்தில் தேடப்பட்டவர் துப்பாக்கிச்சூட்டில் பலி



திருகோணமலை மட்கோ வீதி விகாரையொன்றிற்கு அருகாமையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார்.

வெள்ளி நள்ளிரவு 2 மணியளவில் பொலிஸார் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் றெஜி பந்துல (வயது 35) என்பவரே பலியானார்.

பிடிவிறாந்தில் தேடப்பட்டு வந்த இந்நபரைக் கைது செய்வதற்காக திருகோணமலை தலைமைப் பொலிஸ் குழுவொன்று வீடு சென்றபோது வீட்டைவிட்டு வெளியே வராமல் ஜன்னலின் ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதன் பின்னர் பதில் தாக்குதல் நடத்திய பொலிஸாரின் துப்பாக்கி வேட்டுக்கு இலக்காகி இவர் ஸ்தலத்திலேயே பலியானார்.

இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது காயமடைந்த (எஸ்.ஐ) பிரேமதாச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

பலியானவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. துப்பாக்கி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக