14 மார்ச், 2010

திருமலை மாவட்டம் மூதூர் பிரதேசசெயலாளர் பிரிவு கங்குவேலி கிராமம்

 

திருமலை மாவட்டம் மூதூர் பிரதேசசெயலாளர் பிரிவு கங்குவேலி கிராமம் மீண்டும் ஒரு அரச ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது. அரசினை காரணம்காட்டி பௌத்தபிக்கு தலைமையில் தமிழ்மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டுள்ளது. நேற்று இப்பகுதிக்கு வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் தமிழர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கைளில் வேலிபோட்டு குடிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது விடயமாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பொலிசார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. காணிஉரிமை பற்றி தகுந்த ஆதாரங்கள் தெரிவிக்கும் பட்சத்தில் காணி உங்களுக்கு பெற்றுத்தரப்படும். இல்லாவிடடால் இது அரசுடமையாக்கப்படும் அரச காணிகளை எவரும் ஆட்சிசெய்யலாம் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தங்களது வெற்றிகளை உறுதிசெய்து கொள்ளும்முகமாக அரசகட்சியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களால் இம்முயற்சி செய்யப்பட்டுள்ளது. கடந்தவருடம் நவம்பர்மாதம் இப்பகுதியில் உள்ள அகத்தியர் தாபனம் திட்டமிடப்பட்ட முறையில் அரசபடைகளால் சிதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன் இன்னொரு முயற்சியாக இது இருக்கலாம். இவ்விடயமாக பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் தமிழ்க்கட்சிகள் வேட்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக