14 மார்ச், 2010

இன்று இந்த மக்களின் அவலத்திற்கும் அவயங்கள் இழந்ததற்கும் யார் காரணம் ?



இலங்கை இறுதி போரில்     கை, கால்களை இழந்தவர்கள்    வாழ முடியாமல் அவதி:     அமெரிக்க செய்தி நிறுவனம் தகவல்


வெளிநாட்டில் உல்லாச வாழ்வை அனுபவிக்கும் புலி பினாமிகளே அன்று புலிகள் இயலாமையால் பின் வாங்கி ஓடினார்கள் அதை புரிந்து கொள்ளமுடியாமல் வெளிநாட்டில் வாழ்கின்ற புலிகள் புலி பினாமிகள் மக்களிடம் ஏமாற்றி அண்ணன் உள்ளே விட்டு அடிப்பார் வெளியே விட்டு அடிப்பார் என்று கூறி பணம் சேகரித்தார்கள் அனால் வன்னிப்பகுதியில் 2008.டிசம்பர் மாதத்திற்கு பிற்பகுதியில் வன்னி மக்களானாலும் சரி புலிகளானாலும் சரி வன்னியை விட்டு வெளியில் யாருக்கும் கொடுக்கவும் முடியாது வேண்டவும் முடியாத நிலையில் இலங்கை ராணுவம் நாலு திசைகளையும் மூடி இருந்தது

இந்தநிலையில் வெளிநாட்டு புலிகள் அண்ணை உள்ளை விட்டு அடிக்க பணம் வேண்டும் இது கடைசி யுத்தம் என்று சேர்த்த பணம் எங்கே ? வெளிநாட்டில் வாழும் தமிழ் உறவுகளே நீங்கள் கொடுத்த பணத்தை தயவு செய்து இந்த அவையங்கள் இழந்த எம் வன்னி மக்களுக்கு கொடுக்கும்படி நீங்கள் பணம் கொடுத்தவர்களிடம் வைப்புறுத்துங்கள் இவர்கள் இந்த பணத்தை ஏப்பம் விடுகின்றார்கள் இன்று வன்னிமக்களின் அவலத்திற்கு நீங்களும் ஒரு பங்காளிகள் அண்ணன் உள்ளை விட்டடிப்பார் என்று எதிர் பார்த்தோம் அண்ணன் ஏமாற்றிவிட்டார் என்று எண்ணாமல் நீங்கள் கொடுத்த பணத்தை எம் உறவுகள் கை கால் அவையங்கள் இழந்தவர்களுக்கு கொடுக்கும் படி வைப்புறுத்துங்கள் இவ் வளவு நாளும் நீங்கள் செய்த தவறுக்கு ஒரு பிராயச்சித்தம் தேடுங்கள்



இலங்கையில் கடந்த ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் இறுதிக் கட்ட போர் நடந்தது. மே மாதம் 18-ந்தேதி விடுதலைப் புலிகளிடம் இருந்த ஒட்டு மொத்த பகுதிகளையும் ராணுவம் கைப்பற்றியது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

போரின்போது வெளியேறிய 2 லட்சத்து 80 ஆயி ரம் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் இப்போது விடுவிக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் பலர் போரின்போது சண்டைக்கு நடுவில் சிக்கி கை, கால், மற்றும் உடல் உறுப்புகளை இழந்தவர்கள். அவர்களுக்கு அரசு தரப்பில் கொஞ்சம் உதவி செய்யப்படுகிறது. ஆனால் உடல் உறுப்புகளை இழந்து விட்ட நிலையில் இனி வாழ்க்கையே முடிந்துவிட்டது என்பது போல அவர்களுடைய நிலைமை உள்ளது.

இது பற்றி அமெரிக்க செய்தி நிறுவனமான சி.என்.என். பாதிக்கப்பட்ட மக் களை நேரில் சந்தித்து செய்தி ஒளிபரப்பியது. கை, கால்களை இழந்த மக்கள் இப்போது வாழ முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்கள் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களின் கதை கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது என்று வேதனையுடன் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிலருடைய பேட்டியையும் ஒளிபரப்பியது.

ரவீந்திரன் (21) என்ற வாலிபர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் உயிர் பிழைப்பதற்காக பல மாதங்களாக ஒவ்வொரு பதுங்கு குழியாக சென்று மறைந்து வாழ்ந்தோம்.

இறுதி கட்ட போரின்போது அதிக அளவில் குண்டு வீச்சு நடந்தது. நான் ஓடிப் போய் ஒரு பதுங்கு குழிக்குள் நுழைந்தேன். அதன் மீதே ஒரு குண்டு வந்து விழுந்தது.

இதில் என் உறவினர் உயிர் இழந்தார். எனது 2 கால்களும் துண்டாகி விட் டன. ஒரு கண்ணையும் இழந்தேன்.

இப்போது ஊருக்கு திரும்பி இருக்கிறேன். கால்களும், கண்ணும் இல்லாத நான் எப்படி வாழப் போகிறேன் என் பதே தெரியவில்லை. எனது வாழ்க்கை முடிந்து விட்டதாகவே கருதுகிறேன்.

இவ்வாறு கூறி அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

இதைப் போலத்தான் ஏராளமானோர் தங்கள் வாழ்க்கையே முடிந்து விட்டது இனி ஆகப்போவது ஒன்றும் இல்லை என்று பரிதாபமாக கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக