14 மார்ச், 2010

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக ஐம்பது வெளிநாட்டுக்

 

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக ஐம்பது வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அழைத்துவர தீர்மானித்துள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது. இந்தக்குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. நீதியானதும் சுதந்திரமான முறையிலும் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கமாகவே வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வரவழைக்க எண்ணியுள்ளதாக பெப்ரல் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தேர்தல் தொடர்பில் இதுவரை 44வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அதிலி 37சம்பவங்கள் விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக