14 மார்ச், 2010

மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் புறக்கணிப்பு




கடந்த வருடம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. அத்துடன் இலங்கை மீது எந்நேரமும் குற்றம் சுமத்துவதை விடுத்து வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்க பாதுகாப்புப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதுபோன்ற கருத்துக்களை கடந்த நான்கு வருடங்களாக அவர்கள் கூறிவருகிறார்கள். அமெரிக்க அரசாங்கம் மாத்திரமல்ல, மனித உரிமை குழுக்களும் அதையே செய்து வருகின்றன எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக் களத்தின் மனித உரிமைகள் அறிக்கையில் தமி ழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கம் ஆகிய இரு தரப்புகள் மீதும் குற்றம் சுமத்தப் பட்டிருந்தது.

அரசாங்க ஆதரவிலான துணை இராணுவக் குழுக்களும் பாதுகாப்பு படைகளும் சிவிலியன்கள் மீது ஆயுதத் தாக்குதல்களை நடத்தியதõகவும் சித்திரவதை, ஆட்கடத்தல், ஆட்களை பணயம் வைத்தல், பணம் பறித்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்தவரும் மனித உரிமை மீறலுக்காக எந்தவொரு இராணுவத்தினரையோ பொலிஸ்ரையோ அல்லது துணை இராணுவ உறுப்பினரையோ எந்தவொரு சிவில் அல்லது இராணுவ நீதிமன்றமோ விசாரணை செய்து தண்டனை வழங்கியதாக செய்தி எதுவும் வெளியõகவில்லை எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.அத்துடன் அரசியல் அமைப்புச் சபையை அமைக்கத் தவறியதன் மூலம் மனித உரிøமகள் ஆணைக்குழு இலஞ்ச விசாரணை ஆணைக்குழு பொலிஸ் ஆணைக்குழு நீதிச் சேøவகள் ஆணைக்குழு போன்றவற்றுக்கான பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறுகையில் ""அவர்கள் (அமெரிக்கா) இத்தகைய விமர்சனங்களை நிறுத்திவிட்டு வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப் பட் டுள்ள அபிவிருத்திகளை கவனத்திற்கொள்ள வேண்டும்'' எனக் கூறியுள்ளார். _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக